RSS

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..


ரித்துவின் விளையாட்டு...

சாதரனமா வீட்டில் சப்பாத்தி செய்யும் பொழுது எல்லாம் ரித்துவின் அம்மா ரித்துவிற்காக எதாவது விசேஷமாக செய்துகொடுப்பது உண்டு.. சில நேரம் சப்பாத்தி சுடும் முன் மாவில் வித விதமாக உருட்டி சில உருவங்களை விளையாட்டாயும்.. மிக்கி, டோரா வடிவிலான சப்பாத்தியை சுட்டு அவள் சாப்பிடுவதற்க்காகவும் என்று..

கடந்த முறை அவ்வாறு சப்பத்தி செய்யும் பொழுது நாங்கள் பேசிக்கொண்டிருந்த சில நிமிடங்களில் ரித்துவே சப்பாத்தி மாவு எடுத்து செய்த “ நத்தை” தான் இது..

இது ரித்துவின் வீட்டுக்குள்ளான கிரிக்கெட் ஆட்டம்.. மேட்ச்ல கூட பவுளிங் போட்டுடலாம் கூட.. இங்கு வீட்டில் சரியா பவுல் பன்றதுக்குள்ள... !!!
இது புதிதாக வாங்கின கோல்ப் விளையாட்டு ..


கிருஸ்துமஸ்..

ஆண்டு இறுதி வந்தாலே இங்கு எங்கள் நிருவனத்தில் எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் தான் ஏதாவது ஒரு விதத்தில் .. இந்தமுறை பக்ரீத்தும் சேர்ந்து விட்டதால் நவம்பர் இருதியிலிருந்தே ஒரே கொண்டாட்டம் தான்.. அலுவலகத்தில் தினமும் கேக், ஸ்வீட்ஸ்னு அமர்க்களம் தான்..
இங்கு எல்ல ஷாப்பிங் நிருவனங்கள் மற்றும் சில இடங்களில் எங்கும் அலங்கரிக்கப்பட்ட கிருஸ்துமஸ் மரங்களும்.. குறைந்த விலை தள்ளுபடி விற்பனைகளுமாய் செல்கிறது.. அதுவும் இல்லாமல் மஸ்கட்டில் நல்ல மழையும் குளிர்ந்த வானிலையும் நல்ல ஒரு திருவிழா தோற்றத்தைக் கொடுக்கின்றன.. (முக்கியமா அலுவலகமே வெறிச்சோடிக் கிடக்கு.. அதான்.. ;))

சென்ற வாரம் சிட்டி செண்டரில் ஷாப்பிங் சென்ற பொழுது அங்கு கிருஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பதை கண்ட ரித்துவும் அந்த கடைப்பெண்னுடன் சேர்ந்து அவலும் பந்துகள், பாக்ஸ்கள் என எடுத்து மரத்தில் அடுக்க ஆரம்பித்துவிட்டாள்.. அன்றிலிருந்து கிருஸ்துமஸ் மரம் எப்போ வைக்கலாம் என்று தினமும் கேட்க ஆரம்பித்து .. இப்போ கிருஸ்துமஸ் தாத்தாவைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்..

சரி நம்மளும் கொண்டாடிலாம்னு ..... எங்க வீட்டிலயும் இங்கே கிருஸ்துமஸ் மரம் மட்டும் நட்சத்திரங்கள்..




மஸ்கட்டில் மழை...

இங்கு கடந்த வெள்ளி இரவில் இருந்து தினமும் மாலையில் நல்ல மழை.. பகலிலும் மேகமூட்டமாகவே இருக்கிறது.. வெள்ளி இரவு மழை பெய்ய தொடங்கியதுமே ரித்துவிற்க்கு ஒரே மகிழ்ச்சி.. மழை மழை என்று வீட்டுக்குள்ளேயே ஒரே ஆட்டம்..

சரி மஸ்கட்டிலேயே பெரிய மழை பெய்யறப்போ நாம அதுல நனையாட்ட எப்படினு.. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு குடை எடுத்துட்டு வீட்டுக்கு வெளியே உள்ள ரோட்டில் மழையோடு நடக்க ஆரம்பித்தோம்..


அப்பொழுது உடன் வந்த அவங்க அம்மா எடுத்த புகைப்படங்கள் தான் இவை..
மழைல வந்துட்டு.. தன்னில ரித்து ஒரே ஆட்டம் தான்.. திருப்பி வீட்டுக்கு கொண்டு போறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு..



Rithus Photos..


இது கசாபில் போட்டிங் சென்ற பொழுது எடுத்தது..


இது ரித்துவின் பிறந்த நாள் விழாவில்..


வீட்டில்.. நடனமாடும் பொழுது..


வீட்டில்..





கசாப் பயணம்..

விடுமுறையின் மூன்றாவது நாள் மஸ்கட்டிலியே ஊர் சுற்றியாகிவிட்டதால்.. நான்காம் நாள் கசாப்பிற்க்கு (இது அந்த “ கசாப்” இல்லீங்க.. ஓமான் நாட்டின் ஒரு பகுதி) க்கு பயணித்தோம்..

ஏற்க்கனவே ஓமன் ஏரில் டிக்கட்டுகள் பதிவு செய்துவிட்டதாலும் உள் நாட்டு விமான பயனமாதலாலும் ஒன்னரை மணி நேரம் முன்னதாக விமான நிலையம் வந்தோம்.. ஆனால் செக் இன் கவுண்டரில் நான் பனி செய்யும் “ நிறுவனத்திடம் இருந்து NOC’ இருந்தால் மட்டுமே கசாப் பயணம் அனுமதிக்க முடியும் என்று செக் இன் செய்ய மறுத்துவிட்டனர்..!! ”கசாப்” என்றாலே பிரச்சினை தானோ??

சரி என்ன செய்தால் செக் இன் செய்வீர்கள்? என்னால் இன்று என் அலுவலகத்தில் கடிதம் வாங்கி வர முடியாது என்ற போது.. சரி இங்கு இருக்கும் ROP ல் ஒரு சீல் வாங்கி வாருங்கள் என்றனர்.. சரி சுலபமாக வாங்கி விடலாம் என்று அங்கு சென்றால்.. அவர்களும் அலுவலக கடிதம் இருந்தால் மட்டுமே அனுமதி என்று கூறிவிட்டனர்.. !! “கசாப்” ஓமானின் ஒரு பகுதியாகவே இருந்தாலும் அங்கு செல்வதற்க்கு யூ ஏ இ (அதாங்க துபாய்)வழியாக தான் செல்ல வேண்டி இருப்பதால் இந்த கெடுபிடி.. இவ்வளவுக்கும் எங்கள் பயணம் வான் வழியாக இருந்தும் இத்துனை கெடுபிடி..

சரி என்னதான் செய்றது கசாப் போறதுன்னு வந்தாச்சு.. சரி நாமே நேரே ROP யின் மூத்த அதிகாரியை பார்க்கலாம்னு சென்று கேட்டேன்.. சரி காத்திருங்கள் என்று கூரி ஒரு அரை மணி நேரம் காக்க வைத்தார்கள்.. இறுதியில் அவரிடம் சென்று நான் கசாப் செல்லவேண்டும் அதும் குடும்பத்துடன் சுற்றுலாவிற்க்காக என்று கூரி..அவரின் நம்பிக்கையை பெற்று “சீல்” வாங்கி விட்டு விமான கவுண்டர்க்கு செக் இன் செய்ய வந்தேன்.. ஓமான் செக் இன் கவுண்டரில் இருப்பவரோ.. சாரி சார் நாங்கள் எல்லா விமானத்திற்க்கும் ஒரு மணி நேரம் முன்னதாகவே செக் இன் முடித்துவிடுவோம் என்று..

என்னடா இதுன்னு அவரிடம் நடந்தவைகளனத்தையும் கூறி நீங்கள் தான் ROP யின் சீல் வேண்டும் என்று சொன்னீர்கள் அதனால் தான் தாமதம் என்று கூறியும்.. ம்ம் கடைசியில் எப்படியோ பெரிய மனசு வைத்து செக் இன் செய்து கொடுத்தார்.. ஒரு வழியா விமானம் ஏறி கசாப் வந்தடைந்தோம்..

வந்ததும் நேரே மலைச்சவாரி தொடங்கினோம்.. ம்ம் மலையே மலை தான் கசாப் முழுவதும்.. 2800 மீட்டர் உயரம் வரை பயனித்தோம்.. அங்கு எடுத்த புகைப்படங்கள் இவை...





மலை உச்சியிலிருந்து திரும்ப வரும் பொழுது ரித்து பாடிய பாட்டை இங்கே கேட்கலாம்..

நினைவுகள்..பக்ரீத் 2009



கடந்த வாரம் பக்ரீத்துக்காக இங்கு 9 நாட்கள் விடுமுறை.. விடுமுறையின் முதல் நாள் இங்கு இருக்கும் யெட்டி பீச்க்கு சென்றிருந்தோம்.. அப்பொழுது பீச் மணலில் விளையாடிக்கொண்டிருந்த ரித்துவின் வீடியோ தான் மேலே இருப்பது..

அடுத்த நாள் மஸ்கட்டிலேயே கடலுக்குள் டால்பின் பார்க்க சென்றிருந்தோம்..மிகவும் அழகான டால்பின்களையும் அமைதியான கடலையும் ரசிக்கும் ரித்து..