இது நாங்கள் திரும்பி வரும்பொழுது ஒரு யாருமற்ற தனியான கடற்கரையில் எடுத்த புகைப்படம்.. காரை விட்டு இறங்கியதுமே ரித்து கடல் நீருக்குள் செல்ல வேண்டும் என்றதும்.. அவள் கைப்பிடித்து கடல் அலை கால் நனைக்குமாறு சிறிது தூரம் நடந்து சென்றோம்..
வாழ்வின் எனது நினைவுகளிலேயே மிகவும் நேசிக்கும் சில நிமிடங்கள்.. யாருமற்ற கடற்கரையில் ரித்துவின் கைபிடித்து இருவரும் நடந்து சென்ற அந்த சில நிமிடங்கள்.. இனி என்றும் மறக்க முடியாததாய்..
நன்றி நிரு.... அந்த நிமிட்ங்களை மறக்காமல் புகைப்படத்தில் மீட்டெடுத்ததுக்கு...

