RSS

கசாப் பயணம்..

விடுமுறையின் மூன்றாவது நாள் மஸ்கட்டிலியே ஊர் சுற்றியாகிவிட்டதால்.. நான்காம் நாள் கசாப்பிற்க்கு (இது அந்த “ கசாப்” இல்லீங்க.. ஓமான் நாட்டின் ஒரு பகுதி) க்கு பயணித்தோம்..

ஏற்க்கனவே ஓமன் ஏரில் டிக்கட்டுகள் பதிவு செய்துவிட்டதாலும் உள் நாட்டு விமான பயனமாதலாலும் ஒன்னரை மணி நேரம் முன்னதாக விமான நிலையம் வந்தோம்.. ஆனால் செக் இன் கவுண்டரில் நான் பனி செய்யும் “ நிறுவனத்திடம் இருந்து NOC’ இருந்தால் மட்டுமே கசாப் பயணம் அனுமதிக்க முடியும் என்று செக் இன் செய்ய மறுத்துவிட்டனர்..!! ”கசாப்” என்றாலே பிரச்சினை தானோ??

சரி என்ன செய்தால் செக் இன் செய்வீர்கள்? என்னால் இன்று என் அலுவலகத்தில் கடிதம் வாங்கி வர முடியாது என்ற போது.. சரி இங்கு இருக்கும் ROP ல் ஒரு சீல் வாங்கி வாருங்கள் என்றனர்.. சரி சுலபமாக வாங்கி விடலாம் என்று அங்கு சென்றால்.. அவர்களும் அலுவலக கடிதம் இருந்தால் மட்டுமே அனுமதி என்று கூறிவிட்டனர்.. !! “கசாப்” ஓமானின் ஒரு பகுதியாகவே இருந்தாலும் அங்கு செல்வதற்க்கு யூ ஏ இ (அதாங்க துபாய்)வழியாக தான் செல்ல வேண்டி இருப்பதால் இந்த கெடுபிடி.. இவ்வளவுக்கும் எங்கள் பயணம் வான் வழியாக இருந்தும் இத்துனை கெடுபிடி..

சரி என்னதான் செய்றது கசாப் போறதுன்னு வந்தாச்சு.. சரி நாமே நேரே ROP யின் மூத்த அதிகாரியை பார்க்கலாம்னு சென்று கேட்டேன்.. சரி காத்திருங்கள் என்று கூரி ஒரு அரை மணி நேரம் காக்க வைத்தார்கள்.. இறுதியில் அவரிடம் சென்று நான் கசாப் செல்லவேண்டும் அதும் குடும்பத்துடன் சுற்றுலாவிற்க்காக என்று கூரி..அவரின் நம்பிக்கையை பெற்று “சீல்” வாங்கி விட்டு விமான கவுண்டர்க்கு செக் இன் செய்ய வந்தேன்.. ஓமான் செக் இன் கவுண்டரில் இருப்பவரோ.. சாரி சார் நாங்கள் எல்லா விமானத்திற்க்கும் ஒரு மணி நேரம் முன்னதாகவே செக் இன் முடித்துவிடுவோம் என்று..

என்னடா இதுன்னு அவரிடம் நடந்தவைகளனத்தையும் கூறி நீங்கள் தான் ROP யின் சீல் வேண்டும் என்று சொன்னீர்கள் அதனால் தான் தாமதம் என்று கூறியும்.. ம்ம் கடைசியில் எப்படியோ பெரிய மனசு வைத்து செக் இன் செய்து கொடுத்தார்.. ஒரு வழியா விமானம் ஏறி கசாப் வந்தடைந்தோம்..

வந்ததும் நேரே மலைச்சவாரி தொடங்கினோம்.. ம்ம் மலையே மலை தான் கசாப் முழுவதும்.. 2800 மீட்டர் உயரம் வரை பயனித்தோம்.. அங்கு எடுத்த புகைப்படங்கள் இவை...





மலை உச்சியிலிருந்து திரும்ப வரும் பொழுது ரித்து பாடிய பாட்டை இங்கே கேட்கலாம்..

1 comments:

Unknown said...

ஓ.ஓமன் நாட்டில் இது மாதிரி ஒரு இடம்மா?பகிர்தமைக்கு நன்றி

Post a Comment